புலிகளுடன் பாமகவுக்கு எந்த உறவும் இல்லை: ஜி.கே.மணி
சென்னை: பாமகவுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்
தமிழக மாணவர் சங்கம் சார்பில் நடந்த பேரணியை தொடங்கி வைத்த ஜி.கே.மணி கூறியதாவது:
தமிழர் பிரச்சனை இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தொடர்கிறது. இந்தியாவில் பல இனம், மொழி, மதம் இருந்தாலும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழர்கள் கீழ்த்தரமாக நடத்துப்படுகின்றனர்.
தமிழர்களுக்குத்தான் ஆதரவு:
இதை எதிர்த்தும், விடுதலைக்காகவும் அவர்கள் போராடுகின்றனர். தார்மீக முறையி்ல் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் விடுதலை போராட்டத்தை ஒர குழு நடத்தும். இலங்கை தமிழர்களை ஆதரிப்பதால் போராளி குழுக்களை ஆதரிப்பதாக அர்த்தமல்ல.
இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ராணுவத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இலங்கை பிரச்சனை இன்னொரு நாட்டு பிரச்சனை என்று மத்திய அரசு சும்மா இருந்துவிடக் கூடாது. இலங்கையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களில் மீண்டும் அவர்களை குடியமர்த்த அந்நாட்டு அரசு முன் வர வேண்டும்.
விடுதலை புலிகள் தீவிரவாதிகள் அல்ல, போராளிகள் குழு என்று ராமதாஸ் கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களின் கண்டனம் நியாயமானது.
ஈழத் தமிழர்களுக்காக விடுதலைப் புலிகள் போராடினாலும், ராஜீவ்காந்தி படுகொலை இந்திய மக்களுக்கு ஆறாத வடு. தமிழ் மண்ணில் அவர் கொலை செய்யப்பட்டது தமிழர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பது அனைத்து தமிழர்களின் விருப்பமாகும்.
புலிகளுடன் சம்பந்தம் இல்லை:
பாமகவுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை பார்த்ததும் இல்லை. பேசியதும் இல்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை.
இந்த பிரச்சனையில் மத்திய அரசு தற்போது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கும் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications