9 மாதம்..1100 ராணுவத்தினர் பலி-இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கடந்த 9 மாதங்களில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 1100 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ளது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிர போரில் இறங்கியுள்ளது.

விடுதலைப்புலிகளின் முகாம்கள், பதுங்கு குழிகள் மீது குண்டு விசி தாக்குதல் நடத்தும் ராணுவம் தமிழர்களின் குடியுருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு சவால்விடும் வகையில் விடுதலைப்புலிகளும் ஆவேசமாக எதிர்தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் சிங்கள கடற்படையின் 2 கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி அவற்றை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் மூழ்கடித்தனர். இதில் 33 கடற் படையினர் பலியானார்கள்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வரும் சண்டையில் கடந்த 9 மாதங்களில் 1100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7000 பேர் காயமடைந்திருப்பதாகவும் ராணுவமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தற்போது வட கிழக்கு இலங்கையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னேற முடியாமல் ராணுவம் தவிக்கிறது. இது புலிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், ராணுவத்தினருக்கான ஆயுதம் மற்றும் உணவுசப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராணுவம் தவிப்புக்குள்ளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+