வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்- மழை தொடரும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்துவருகிறது. அதனால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்ததால் தமிழகமே வெள்ளக்காடாகிப் போனது.
அந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து சென்று விட்டது. இந்த நிலையில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திரக்கரையோரம் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துவிட்டது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார்.