Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் கொல்லப்பட்ட கேரள தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெதரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அக்டோபர் 7ம் தேதி நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகளை ராணுவத்தினர் கைப்பற்றிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.

அவர்களில் ஒருவர் கன்னூரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான். இன்னொருவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது பயஸ் எனத் தெரிய வந்தது.

இருவரையும் அடையாளம் காட்ட கேரளாவிலிருந்து சிபிஐடி போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.

ஆரம்பத்திலேயே இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூறியருந்தனர். இருவரும் மலையாள இலக்கிய புத்தகங்களை தங்களுடன் வைத்திருந்ததாகவும் அவர்கள் ெதரிவித்தனர். ஆனால் அதை கேரளா போலீஸார் மறுத்தனர்.

இருப்பினும் தொடர்ந்து கிடைத்த ஆதாரங்களை வைத்து தற்போது இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+