இலங்கை: அரசு நடவடிக்கையில் வீரமணி மகிழ்ச்சி
சென்னை: முதலமைச்சர் கருணாநிதி எடுத்த முயற்சிகள் காரணமாக இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் பெரிய திருப்பம் ஏற்பட்டிருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது முதல்வர் எடுத்த அடுக்கடுக்கான முயற்சிகள், தமிழ் மக்களின் எழுச்சி வீண் போகவில்லை; நல்ல விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றன!
சிங்கள அதிபராகவே நடந்து கொள்ளும் ராஜபக்சே நமது பிரதமரிடம் பேசியது இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் இந்தியத் தூதவரிடம் பேசி, இலங்கை அரசுக்கு இந்திய அரசின் கவலையையும், உணர்வுகளையும் தெரிவித்தது; அங்கிருந்து அவரது ஆலோசகர்களை ஒரு குழுவாக அனுப்பி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச வைத்தது;
அங்குள்ள தமிழர்களைக் கொல்லாமல், காப்பாற்றிட அவர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்களை உடனடியாக அனுப்பிட ஏற்பாடுகள் செய்திருப்பது உள்பட அரசியல் தீர்வு காண உடனடியான ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் உத்தரவாத உறுதி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாள்களில் ஏற்பட்ட ஆக்க ரீதியான பலன்கள் பலவற்றைத் தந்துள்ளது.
நமக்கு 100க்கு 100 மன நிறைவு இதன் மூலம் உடனடியாக ஏற்பட்டு விட முடியாது என்றபோதிலும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போரில் இது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications