இலங்கை பிரச்சனையில் கருணாநிதி காற்றுபோன பலூன்-விஜய்காந்த்
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி காற்றுப் போன பலூனாக ஆக்கிவிட்டார். தமிழகத்தில் மின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இலங்கைப் பிரச்னை கருணாநிதிக்குப் பயன்பட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அரசு தமிழ் பகுதிகள் மீது விமானப் படைகள் மூலம் குண்டுமாறிப் பொழிகிறது. இதன் விளைவாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மாதா கோவில்கள், இந்து கோவில்கள் என்று பொது நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளும் பலத்த உயிர்ச் சேதத்திற்கும், பொருட் சேதத்திற்கும் ஆளாகின்றன.
இதனாலேயே இலங்கை அரசு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினோம்.
ஆனால், இலங்கை அரசோ விடுதலைப்புலிகள் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும், ஒரு அப்பட்டமான பொய்யை கூறி வருகின்றது. இது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியமாகும்.
இரண்டு லட்சம் தமிழர்கள் போர் முனையில் சிக்கித் தவிக்கின்றனர் என இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசு தங்களை போர் நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் பேசியபோதும் போர் நிறுத்தத்தைக் கோரவில்லை. இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் எம்பிக்கள் ராஜினாமா செய்வர் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவித்தனர். இரண்டு வாரங்களும் ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. எம்பிக்களும் பதவி விலகவில்லை.
இலங்கைத் தமிழர்கள் மீது பொழியும் குண்டுகள் மட்டும் இன்னும் நின்றபாடில்லை. இலங்கை அரசின் சார்பில் வந்த சிறப்புத் தூதர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இதில் கருணாநிதிக்கும் திருப்தி, பிரணாப் முகர்ஜிக்கும் திருப்தி, இலங்கை அரசுக்கும் திருப்தி.
ஆனால், வீட்டை இழந்து வாழ்விழந்து உயிருக்குப் போராடும் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு திருப்தியா?.
இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி காற்றுப் போன பலூனாக ஆக்கிவிட்டார். தமிழகத்தில் மின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இலங்கைப் பிரச்னை கருணாநிதிக்குப் பயன்பட்டது.
கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடந்து கொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே வெகுவாக பாராட்டியுள்ளார். கருணாநிதி முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின் அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டும் என்றும், இலங்கை அதிபர் வேண்டுகோள் விட்டதிலிருந்தே இலங்கை தமிழர் பிரச்சினையில் எத்தகைய மகத்தான பணியை கருணாநிதி ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்.
எல்லா மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கொடுப்பது தான் ஜனநாயகம். புத்த மத குருமார்களின் மேற்பார்வையில் சிங்கள வெறியர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு ஜனநாயக முலாம் பூசுவதை எப்படி ஏற்க முடியும்?.
இலங்கை அரசோ பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் இலங்கை தமிழினத்தை அழிக்கும். இந்திய அரசோ, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யச் சொல்லாது. தமிழக அரசோ இலங்கைத் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும்.
இலங்கை அரசின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டியதே தமிழ் மக்களின் கடமை. இலங்கைத் தமிழர்களுக்கு தேமுதிக தன்னால் இயன்றதை மாவட்டந்தோறும் திரட்டி அந்தந்த கலெக்டர்களிடம் ஒப்படைக்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications