பெட்ரோல் விலை: 50% குறைக்க சுவாமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 148 டாலரிலிருந்து 62 டாலராக குறைந்துள்ளது.
பேரல் 148 டாலராக இருந்தபோது பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது.
தற்போது பேரல் 62 டாலராக குறைந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் கட்டணத்தைக் குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தற்போதுள்ள கட்டணத்தை விட பாதியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications