சென்செக்ஸ் இன்று 743 புள்ளிகள் உயர்வு!
மும்பை: கடந்த இரு வாரங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த மும்பை பங்குச் சந்தை இன்று விறவிறுப்புடன் இயங்கியது.
வர்த்தக நேரத்தின் துவக்கத்திலேயே 200 புள்ளிகள் ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 743 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 188 புள்ளிகள் உயர்ந்தது.
தீபாவளிக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் குறைந்ததாலும், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை மறுபரிசீலனை காரணமாகவும் இந்த நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா, எச்டிஎப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்றவற்றின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
பங்குச் சந்தை முவில் சென்செக்ஸ் 9788.06 புள்ளிகளிலும், நிப்டி 2885.60 புள்ளிகளிலும் நிலைபெற்றது.