ராஜ் மீது குண்டாஸ்-மத்திய அமைச்சரவை கோரிக்கை
டெல்லி: வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரவை கோரியுள்ளது.
வட இந்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது. ஆனால், இதில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சரத் பவார், பிரபுல் படேல், ஏ.ஆர்.அந்துலே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரான உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மட்டுமே பங்கேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் மிகக் கோபமாகப் பேசினர். ராஜ் தாக்கரேவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாஸ்வான் கோரினார். இதை லாலுவும ஆதரித்தார். இதை மற்ற அமைச்சர்களும் ஆமோதித்தனர்.
விரைவில் வட மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சில அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், அரசியல் தைரியம் இருந்தால் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கு தமிழகம் தான் உதாரணம். புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோவை அந்த மாநில அரசு கைது செய்யவில்லையா?. அதே போல இந்த ராஜ் தாக்கரேவையும் பிடித்து உள்ளே போட மராட்டிய முதல்வருக்கு உத்தரவிடுங்கள் என்றார்.
ஒரு கட்டத்தில் லாலுவும் பாஸ்வானும் மத்திய அரசையும் மகாராஷ்டிர காங்கிரஸ் அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கவே, நான் என்ன தான் செய்ய முடியும் என பிரதமர் தனது இயலாமையைக் காட்டியதாகவும் தெரிகிறது.
கூட்டத்தின் முடிவில், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக்குக்கு சிவராஜ் பாட்டீலை விட்டு கடுமையாக எச்சரிக்கை விடுப்பது என முடிவானது. மேலும் பிகார் வாலிபர் சுடப்பட்டது, உ.பி. வாலிபர் ரயிலில் கொல்லப்பட்டது ஆகியவை குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடவும் முடிவானது.
சாத் பூஜையை தடுக்க மாட்டோம்- ராஜ்:
இந் நிலையில் இன்று நீதிமன்ற அனுமதியோடு நிருபர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே,
மும்பையில் நடக்கும் சாத் பூஜாவை (வட இந்தியர்கள் கொண்டாடும் விழா) நாங்கள் தடுக்க மாட்டோம். சில சமூக விரோதிகள் தான் அதைத் தடுத்து நிறுத்தி வன்முறையைத் தூண்ட முயல்கின்றனர் என்றார்.
இந்தப் பூஜையில் பங்கேற்க உத்தரப் பிரதேசம், பீகாரில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் மும்பையில் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராஜ் கூறுகையில், மராத்தி தெரியாதவர்கள் மும்பைக்கு வருவதை நான் இப்போதும் எதிர்க்கிறேன். மும்பையில் உ.பி. வாலிபர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், அஸ்ஸாமில் பிகாரிகள் கொல்லப்படுவது குறித்து விசாரிப்பதில்லை. அதே போல மராட்டிய வாலிபர்கள் தாக்கப்பட்டாலும் யாரும் வாய் திறப்பதில்லை என்றார் ராஜ்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications