உத்தப்புரம் தீண்டாமை: நவ. 5ம் தேதி உண்ணாவிரதம்
மதுரை: உத்தப்புரத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மதுரையில் நவம்பர் 5 -ம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தப்புரத்தில் அரசு தலையிட்டு திறக்கப்பட்ட பொதுப் பாதையை பயன்படுத்த விடாமல் ஆதிக்க சக்திகள் சிலர் தொடர்ந்து வன்முறையை ஏவிவிட்டு வருகின்றனர்.
உத்தப்புரம் தலித் மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட உத்தப்புரம் தலித் மக்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
அவர்கள் மீது போலீசாரால் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும்.
தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நவம்பர் 5 -ம் தேதி மதுரை, மேல - வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications