நிதி உதவி: நெகிழ வைத்த மயில்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு வந்த மயில்சாமி தனது பங்களிப்பாக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

அவர் கூறியதாவது:

நான் மக்கள் திலகத்தின் தொண்டன். 'உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டாலும் முதலில் அவர்களுக்குத் தேவை உதவி. அப்புறம்தான் ஆதரவுப் பேச்சு' என்பது மக்கள் திலகத்தின் கொள்கை.

அதனால்தான் தமிழர்களுக்கு பாதிப்பு என்றதும் 25 ஆண்டுகளுக்கு முன்பே உடனே தனது சொந்த நிதியிலிருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவினார் எம்ஜிஆர். அவரது தொண்டனான நானும் அவர் வழியைப் பின்பற்றவே விரும்புகிறேன்.

எனவே பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்னாலான உதவியாக ரூ.25 ஆயிரம் நிதியை அளிக்கிறேன். பேச்சையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், என்றார்.

சொன்னது போல மேடையிலேயே ரூ.25 ஆயிரம்நிதியை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவியிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மேலும் சில கலைஞர்களும் தங்களாலான நிதியைக் கொடுத்தனர்.

சன் லைவ்:

உண்ணாவிரதத்தை சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+