கார் மோதி பலி-உடலை வீசிவிட்டு தப்பியோர் கைது
சென்னை: சென்னையில் ரோட்டில் நடந்து சென்றவர் மீது கார் மோதியதி்ல் அவர் பலியானார். இதையடுத்து அவரது உடலை வேறு இடத்தில் வீசுவிட்டுத் தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு பின்புறம் ரோடு ஓரத்தில் கடந்த 29ம் தேதி ஒரு ஆணின் பிணம் கிடந்தது.
அவரது சட்டை பையில் இருந்த டைரியில் இருந்த டெலிபோன் எண்ணை வைத்து அவரது பெயர் தயாளன் ( 48), மைலாப்பூர் காரனேஸ்வரர் பக்கோடா தெருவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். பிணத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது உடம்பில் கார் டயர் ஏறிய தடம் இருப்பதாகவும், கார் ஏறியதில் தான் இறந்தார் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், தயாளன் 29ம் தேதி அன்று இரவு மைலாப்பூர் வி.எம்.தெரு ஆர்.கே.சாலை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதாகவும், உயிருக்குப் போராடியபடி கிடந்த தயாளனை காரில் வந்தவர்கள் ஏற்றி சென்றதாகவும் சில ஆட்டோ டிரைவர்கள் தெரிவி்த்தனர்.
மேலும் காரின் நம்பரையும் அந்த ஆட்டோ டிரைவர்கள் தந்தனர்.
இந்த விவரத்தை வைத்து காரின் உரிமையாளரான சதக் அப்துல்லாவை (32) போலீசார் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது தெரியவந்த விவரம்:
அப்துல்லா, அவரது நண்பர்களான அரசு ஊழியர் செல்வமணி (33), மதுக்கடையில் வேலை பார்க்கும் முரளி (32) மூவரும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, காரில் வந்தபோது தயாளன் மீது கார் மோதியுள்ளது.
இதையசுத்து காயமடைந்த தயாளனை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காரில் ஏற்றிச் சென்றனர். ஆனால், சிறிது தூரத்திலேயே தயாளன் இறந்துவிட்டார்.
இதையடுத்து கொலை கேஸில் மாட்டுவோம் என பயந்து தயாளனின் பிணத்தை வைத்துக் கொண்டு காரில் பல இடங்களில் சுற்றியுள்ளனர்.
கடைசியாக பச்சையப்பா கல்லூரிக்கு பின்புறம் ஹாரிங்டன் ரோட்டில் இருட்டான பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கவே உடலை அங்கு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அவர்கள் தந்த வாக்குமூலத்தில் இந்த தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications