மீண்டும் 10000 புள்ளியை தொட்ட சென்செக்ஸ்
மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மேலும் மீண்டு சென்செக்ஸ் குறியீட்டு எண் 10,332த்தைத் தொட்டது.
உலக பொருளாதார சீர்குலைவால் இந்திய பங்குச் சந்தையும் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 8000க்குக் கீழே போய் முதலீட்டாளர்களை பீதிக்குள்ளாக்கியது.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில் ஏறுமுகம் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 544 புள்ளிகளை பெற்றது. இதன்மூலம் மீண்டும் 10,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தொட்டது.
சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த அடுத்ததடுத்த நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அதே போல தேசிய பங்குச் சந்தையிலும் ஏறுமுகமே காணப்பட்டது. இன்று காலை 158.80 புள்ளிகளை அதிகம் அதன் குறியீட்டு எண்ணைன நிப்டி 3,044 என்ற நிலைக்கு மேலே வந்தது.












Click it and Unblock the Notifications