பிகார்: மராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது தாக்குதல்
மும்பை: பிகாரில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகாரின் புர்னியா மாவட்டத்தில் துணை மண்டல அதிகாரியாக இருப்பவர் அஸ்வினி தாக்கரே. இவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரது வீட்டையும் அலுவலகத்தையும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சியைச் சேர்ந்த 200 பேர் கொண்ட கும்பல் தாக்கி சூறையாடியது.
தாக்கரே என்ற பெயர் கொண்ட இவர் பால் தாக்கரேவுக்கோ, ராஜ் தாக்கரேவுக்கோ எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர். ஆனாலும் அவரை தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குலுக்கு பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அஸ்வினி மீதான தாக்குதல், மகாராஷ்டிரம் மீதான தாக்குதல் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா நடத்திய விவசாயிகள் பேரணி- பொதுக் கூட்டத்தில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் நாங்கள் பங்கேற்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பங்கேற்போம் என்பதால் அந்தக் கூட்டத்தை தான் புறக்கணித்துவிட்டதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளது கண்டித்தக்கது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
லோக் தள், சிவ சேனாவைப் போலவே, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரத்தில் நடக்கும் வன்முறையால் இதனால் அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications