டெண்டுல்கருக்கு ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil

இதனால் வியாழக்கிழமை (நவ 6) நாக்பூரில் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடக்கவுள்ள இறுதி டெஸ்டின்போது சச்சினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாக்பூர் காவல்துறை ஆணையர் பிரவீண் தீக்ஷித் கூறுகையி்ல்,
சச்சின் டெண்டுல்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. தற்போது நாக்பூரில் தங்கியுள்ள சச்சினுக்கு மிகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
ஆனால் இந்த மிரட்டல் குறித்து சச்சின் பயப்படத் தேவையில்லை. எங்கள் காவலை மீறி அவரை யாரும் நெருங்கிவிட முடியாது என்றார்.
சச்சினுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. 2007ம் ஆண்டு அவர் கட்டாக் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக விளையாடும்போதும் இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications