புலிகளின் கடற்படை முகாம்கள் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: முல்லைத் தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் இரு கடற்படைத் தளங்களை இலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இதில் இரண்டு தளங்களும் பலத்த சேதமடைந்தாக இலங்கை தெரிவித்துள்ளது.
விமானங்கள் குண்டு வீசியதில் விடுதலைப் புலிகளின் ஒரு கடற்படை தளம் தீப்பற்றி எரிந்ததாக விமானப் படை செய்தித் தொடர்பாளர் ஜனக நயனகாரா தெரிவித்தார்.
மேலும் புலிகளின் பயிற்சி முகாமையும், ஒரு சப்ளை மையத்தையும் விமானங்கள் தாக்கியதாக அவர் கூறினார்.
இதற்கிடையே வன்னி பகுதியில் விளாங்குளத்தில் இருந்து மாங்குளம் நோக்கி சிங்கள ராணுவத்தினர் முன்னேற முயன்றனர்.
அவர்கள் மீது விடுதலைப் புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications