தமிழகத்தில் 10 எஸ்பிக்கள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 10 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறைச் செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில், (அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):
பொன்.மாணிக்கவேல் (அதிரடிப்படை-ஈரோடு) - தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட், பழனி
சொக்கலிங்கம் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட், பழனி)- மனித உரிமை கமிஷன் (சென்னை).
சத்தியபிரியா (மனித உரிமை கமிஷன்)- உதவி ஐ.ஜி, சென்னை தலைமையிடம்
கணேசமூர்த்தி (சென்னை சிறப்பு பாதுகாப்புப் பிரிவு)- சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர்
லட்சுமி (சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர்)- லஞ்ச ஒழிப்புப் பிரிவு, சென்னை மத்திய சரக எஸ்பி
ஆசியம்மாள் (லஞ்ச ஒழிப்புத்துறை)- சென்னை பூக்கடை துணை கமிஷனர்
கருப்பசாமி (பூக்கடை துணை கமிஷனர்)- அதிரடிப்படை, ஈரோடு
ராஜேந்திரன் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, வேலூர்)- மதுரை நகர தலைமையிடம்.
ராஜசேகரன் (மதுரை நகர குற்றப்பிரிவு)- திருச்சி ரயில்வே.
திருச்சி ரயில்வே எஸ்பி ராஜசேகரன், மதுரை துணை கமிஷனராக (குற்றம்) நியமிக்கப்பட்டு கடந்த 17ம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் திருச்சி ரயில்வே எஸ்பியாக பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.
அதே போல ராஜேந்திரன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் இருந்து திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டிருந்தார். அந்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டு, மதுரை நகர தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரவீந்திரன் (உதவி ஐ.ஜி, தலைமையிடம்)- காத்திருப்போர் பட்டியல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications