பெண் நோயாளியிடம் சில்மிஷம் டாக்டர் கைது!
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது சேர்ந்தமரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரது மனைவி ஸ்டெல்லா மேரி (40).
மேரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திருமலாபுரத்தில் உள்ள சித்த மருத்துவரான டாக்டர் ரவி, ஸ்டெல்லா மேரியின் வீட்டு்ககு வந்து சிகிச்சை அளித்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து மேரியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அவரை சத்தம் போட்டு அனுப்பிய ஸ்டெல்லா மேரி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டாக்டர் ரவி கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications