'பார்ட்டி': போதையில் ரகளையா?-ஸ்ரீசாந்த் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Sreesanth with Lakshmi Rai
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த பார்ட்டியின்போது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார்.

ஓசூர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரவு விருந்தில் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார். அவருடன் சில பெண்கள் உள்ளிட்ட ஸ்ரீசாந்த்தின் நண்பர்களும் பங்கேற்றனர்.

விடிய விடிய நடந்த இந்த இரவு விருந்தின்போது மது போதையில் ஸ்ரீசாந்த்தும், அவரது நண்பர்களும் அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அக்குடியிருப்பில் வசி்பவர்கள் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். அதில் ஸ்ரீசாந்த் தங்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இந்தப் புகாரை ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார். எனக்கு எதிராக சிலர் அவதூறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீசாந்த் சமீப காலமாக அதிகளவில் சர்ச்சையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் சிலருடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டதாக புதிய சர்ச்சையில் அவர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+