இலங்கை இனப்படுகொலை: டெல்லியில் தமிழ் மாணவர்கள் பேரணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் தமிழ் மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

இலங்கை இனப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த டெல்லி தமிழ் மாணவர்கள் பேரவை சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

மண்டி இல்லத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணி முடிந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+