எம்எல்ஏக்கள் கூட்டம்-ஜெ, எஸ்வி.சேகர் வரவில்லை
சென்னை: சென்னையில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரவில்லை. அதேபோல மேலிடத்துடன் சுமூக நிலையில் இல்லாத மயிலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரும் வரவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இலங்கைப் பிரச்சினை, மின் சாரப் பிரச்சினை குறித்து கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அதேபோல மேலிடத்துடன் உரசல் போக்கில் ஈடுபட்டுள்ள மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரும் கூட்டத்திற்கு வரவில்லை. அவர் கூட்டத்துக்கே அழைக்கப்படவில்லை என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications