இலங்கையி்ல் போரை நிறுத்த வேண்டும்-அதிமுக
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஈழத் தமிழர்கள் விவகாரம் எதிரொலித்தது. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.
இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் எழுந்து, புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களுக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் நிலவியது.
இதையடுத்து ஞானசேகரனுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார்.
அப்போது பாமக தலைவர் மணியும், சிபிஐ எம்எல்ஏ சிவபுண்ணியமும், இலங்கையில் உடனே போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பாவி்த் தமிழர்களின் கொலையைத் தடுக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபடவே அவையில் அரை மணி நேரம் குழப்பம் நிலவியது.
இதையடுத்து அதிமுக சார்பில் தரப்பட்ட ஒத்தி வைப்புத் தீர்மானத்தில் பேசுமாறு செங்கோட்டையனை சபாநாயகர் அழைத்தார்.
அப்போது எழுந்த பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள், இங்கே என்ன பிரச்சனையை எழுப்ப விரும்புகிறோம் என்பதைக் கேட்டுவிட்டு, பின்னர் அதற்கான தேதியை ஒதுக்கி விவாதத்துக்கு சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்றனர்.
ஆனால், அதை சபாநாயகர் ஏற்க மறுத்தார். அப்போது எழுந்த முதல்வர் கருணாநிதி, என்ன பிரச்சனையை கிளப்ப விரும்புகிறீர்கள் என ஒவ்வொரு கட்சியினரும் தெரிவித்தால் அதற்கு பதிலளிக்க அரசுக்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
இதையடுத்து அவர்களை சபாநாயகர் பேச அனுமதித்தார். அப்போது எழுந்த அதிமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் இலங்கையில் போரை உடனே நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், போரை நிறுத்த புலிகள் தயாராக உள்ள நிலையில் இலங்கைக்கு நெருக்கடி தருமாறு மத்திய அரசு மீது தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேசுகையி்ல், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில் புலிகளையும் பிரபாகரனையும் ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகள், திரைப்படத் துறையினரை அரசு கைது செய்ய வேண்டும்.
வைகோ, அமீர், சீமானை மட்டும் கைது செய்த அரசு ஏன் திருமாவளவனைக் கைது செய்யவில்லை என்றார்.
அதிமுக சார்பில் பேசிய பன்னீர்செல்வம், இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வந்து தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தை தயவு செய்து உறுப்பினர்கள் திசை திருப்பக் கூடாது.
இரு தரப்பினரும் முன் வந்தால் தான் போர் நிறுத்தம் சாத்தியம் என முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். இப்போது புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்துவிட்டன. ஆனால், இலங்கை அரசு தான் அதை நிராகரித்துவிட்டதோடு, தமிழர்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
எனவே இந்த விஷயத்தில் முதல்வர் மத்திய அரசுடன் உடனே பேசி, போரை நிறுத்தவும் அங்கே தமிழர்கள் அமைதியாக வாழவும் வழி வகை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications