For Daily Alerts
Just In
நெல்லை எஸ்.பி. பங்களா அருகே வீசப்பட்ட சிசு மீட்பு
நெல்லை: பாளை ஹைகிரவுண்ட் ரோட்டில் உள்ள எஸ் பி பங்களா எதிரே காலை பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவல் அறிந்த போலீஸார், நெல்லை அரசு மருத்து கல்லுரி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த செவிலியர் வந்து குழந்தையை மீட்டு சென்றனர்.
பிறந்த சில மணி நேரமே ஆன நிலையில் கிடந்த அக்குழந்தை தற்போது மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை.
கள்ளக்காதலில் பிறந்ததாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Wednesday, November 12, 2008, 11:41 [IST]