For Daily Alerts
Just In
கோவை தொழில் நுட்ப பூங்கா பணி விரைவில் நிறைவு: கருணாநிதி
கோவை: இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணி முடிவடையும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழக சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது, கருணாநிதி கூறுகையில், கோவை விளாங்குறிச்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதற்கட்டமாக 29.8 ஏக்கர் நிலமும், இரண்டாம் கட்டமாக 32.5 ஏக்கர் நிலமும் எல்காட் நிறுவனத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு இந்திய அரசு ஆணை வழங்கியுள்ளது.
இந்த பகுதியில் பத்து ஏக்கர் பரப்பளவில் விப்ரோ நிறுவனமும், ஐந்து ஏக்கர் பரப்பளவில் டி.சி.எஸ். நிறுவனமும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை அமைப்பதற்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைவதன் மூலம் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். மென்பொருள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றார்.
Comments
Story first published: Wednesday, November 12, 2008, 16:41 [IST]