கருணாநிதியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகரின் புதிய காவல்துறை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள கே.ராதாகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறையைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சேகர் அதிரடியாக மாற்றப்பட்டார். சிவில் சப்ளைஸ், கூடுதல் டிஜபியாக அவர் மாற்றப்பட்டுள்ளார்.
அப்பதவியில் இதுவரை இருந்து வந்த ராதாகிருஷ்ணன் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணன் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்தி்ப்பின்போது முன்னாள் ஆணையர் சேகரும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications