பலவீனமடைந்த கைமுக் புயல் நெல்லூரில் கரையைக் கடந்தது

Subscribe to Oneindia Tamil

Khai Muk crosses coast
விசாகப்பட்டனம்: ஆந்திராவை அச்சுறுத்திய கைமுக் புயல், பலவீனமடைந்த நிலையி்ல நெல்லூரில் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியிருந்த கைமுக் புயல், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் கைமுக் புயல் வலுவிழந்தது.

இதையடுத்து இன்று அதிகாலையில் கைமுக் புயல், நெல்லூர் மாவட்டம் காவலி என்ற இடத்தில் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக ராயலசீமா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

மேலும், தெற்கு கடலோர ஆந்திரா முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்புடன் இருப்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+