வயலில் வெநீநீர் ஊற்று - தஞ்சை அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளியில் வயல் ஒன்றில் வெந்நீர் ஊற்று பீறிட்டது.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம் பூண்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.
இவரது வயலில் இருந்த ஒரு மின் கம்பம் பழுதடைந்து விட்டது. இதனால் இந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று ராஜகோபால் மின்சார வாரியத்திடம் முறையிட்டார்.
இதனால் மின்சாரவாரிய ஊழியர்கள் அந்த மரத்தை அங்கிருந்த அகற்ற அதன் அருகில் குழி தோண்டினர்.
அப்போது அந்த குழியில் இருந்து திடீரென வெண்நீர் ஊற்று தோன்றியது. அந்த வெண்நீர் பீறிட்டு அடித்தது.
இதனால் மின்சாரவாரிய ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
இந்த தகவல் வருவாயத்துறை உயர் அதிகாரிகளுக்கும், தீயணைப்புபடை விரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications