டெல்லி பாஜக வேட்பாளர் மரணத்தில் மர்மம்?
டெல்லி: டெல்லி பாஜக எம்.எல்.ஏவும், சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான பூரன் சந்த் யோகியின் மரணத்தில் மர்மம் நிலவுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி, ராஜேந்தர் நகர் எம்.எல்.ஏவாக இருந்து வந்தர் பூரன் சந்த் யோகி. இவர் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்ட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இல்லத்தில் நேற்று அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
ஆனால் பூரி தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பூரிக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணத்தால் தற்போது இத்தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பூரியின் மரணம் குறித்து டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், முதல் கட்ட விசாரணையிலிருந்து இது தற்கொலை எனத் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
தேர்தல் முடிவு குறித்து கவலையுனுடம், பதட்டத்துடனும் இருந்துள்ளார் யோகி. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் பூரி இதய நோயாளி என்றும், மாரடைப்பு ஏற்பட்டுத்தான் அவர் மரணமடைந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து பூரியின் மகன் ராஜீவ் கூறுகையில், எனது தந்தை தனது வெற்றி குறித்து நம்பிக்கையுடன் இருந்தார். அவர் பதட்டத்துனடோ, மன அழுத்தத்திலோ இல்லை என்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலாவில் 1935ம் ஆண்டு பிறந்தவர் பூரி. 1967ல் அரசியலில் இணைந்தார். ராஜேந்தர் நகர் தொகுதியில், 93ம் ஆண்டு முதல் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications