தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் கொழும்பு சென்றன
கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதியும், நிவாரணப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் முதல் கட்டமாக 1700 டன் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவை இதில்இடம் பெற்றுள்ளன.
இந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளது.
அரசு நடைமுறைகளுக்குப் பின்னர் இவை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தப் பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிப்பார்கள்.
80 ஆயிரம் குடும்பங்களுக்கான பொருட்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications