ஈழப் பிரச்சினையில் அக்கறையில்லாத பிரதமர்: திருமா. குற்றச்சாட்டு
சென்னை: ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தீர்வு காண்வதில் பிரதமர் மன்மோகன் சிங் அக்கறை காட்டவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான ஓவிய முகாம் நடைபெற்றது.
பிரபல ஓவியர்கள் தட்சிணாமூர்த்தி, மருது, புகழேந்தி, வீரசந்தானம், மோகன் கல்யாணி, மனோகரன் உள்ளிட்ட ஓவியர்கள் ஈழத் தமிழர்களின் பரிதாப நிலையை சித்திரங்களாக தீட்டினர்.
இந்த ஓவிய முகாமை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகும் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை துறந்து சரணடைய வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே ராஜபக்சேவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது.
அங்கு போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சேவை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரிடம் இதை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்திய ராணுவம் இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications