For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் செக்ஸ் டார்ச்சர்-கலெக்டரிடம் அரவாணிகள் புகார்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:போலீஸார் தங்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக கூறி அரவாணிகள், நெல்லை கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

நெல்லை கைலாசபுரத்தை சேர்ந்த அரவாணிகள் ரோஜா, நயன்தாரா தலைமையில் 10 பேர் கலெக்டர் பிரகாசிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது,

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் வசித்து வருகிறோம். தினமும், பகல் இரவு என பாராமல் சீருடையில்லாத போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து பாலியல் தொந்தரவு செய்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வாடகைக்கு வீடு கொடுத்தவர்களை மிரட்டி வீடுகளை காலி செய்ய கூறுகின்றனர். போலீசாரால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே எங்களை நிம்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X