பிரஞ்யா சித்திரவதை-பிரதமரிடம் அத்வானி புகார்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அத்வானி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், தன்னை போலீஸார் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். நாசிக் கோர்ட்டிலும் இதை அவர் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மும்பை போலீஸாரின் செயல்பாட்டை அத்வானி கடுமையாக கண்டித்து அறி்க்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங், அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாலேகான் வழக்கை மும்பை போலீஸார் கையாளும் விதம் குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதமரிடம் அத்வானி தெரிவித்ததாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பெண் அதிகாரியைக் கூட உடன் வைத்துக் கொள்ளாமல் பெண் துறவி பிரக்யாவிடம் விசாரணை நடத்தியதற்கும் அத்வானி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ஒரு பெண் கைதியை சித்திரவதைப்படுத்தியுள்ள போக்கும் கடும் கண்டனத்துக்குரியது. இது உச்சநீதிமன்ற வழிகாட்டு உத்தரவை மீறும் செயல் என்றும் அத்வானி பிரதமரிடம் கூறியுள்ளார்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications