பகுஜன் சமாஜில் சேரும் சிவகாமி ஐ.ஏ.எஸ்

தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை ஆணையராக இருந்தவர் பி.சிவகாமி (வயது 51). தலித் வகுப்பைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், நேர்மைக்குப் பேர் போனவர்.
இவர் விருப்ப ஓய்வு கேட்டு அரசிடம் மனு செய்திருந்தார். அவரது விருப்ப ஓய்வு மனுவை தமிழக அரசு நேற்று ஏற்றுக்கொண்டது. அவர் 23ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
29 ஆண்டு கால அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் சிவகாமி 25ம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் சேருகிறார்.
தலித் இலக்கியத்தில் சிறந்த விளங்குபவர்களில் சிவகாமியும் ஒருவர். ஏராளமான கதைகள், கட்டுரைகள், நூல்களை அவர் எழுதியுள்ளார். தலித் பெண்களின் வளர்ச்சிக்காகவும் அவர் போராடி வந்தார்.
இந்த நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக தற்போது அவர் தனது ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications