ஆந்திராவைச் சேர்ந்த சிறுவர்கள் திருச்சியில் மீட்பு !
திருச்சி: வீட்டை விட்டு ஓடி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுவர்களை திருச்சியில் போலீசார் மீட்டனர்.
திருச்சி துவாக்குடி பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கடந்த சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள காவெளி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் - லட்சுமி தம்பதியின் மகன் வெங்கடேஷ் (15), குண்டூர் அருகே பொன்னூரைச் சேர்ந்த கோடீஸ்வர ராவ் - நாகவேணி தம்பதியின் மகன் நவீன் (12), என தெரிய வந்தது.
இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வந்தாக கூறப்படுகிறது. இருவரும் தஞ்சை அருகே உள்ள பூதலூரில் ஒரு வாத்து பண்ணையில் வேலை செய்து வந்தனர். அந்த வேலை பிடிக்காததால், ரயில் மூலம் திருச்சி வந்துள்ளனர்.
அங்கு வேலை தேடி திரிந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை சிறுவர்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவர்களின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர்.
நவீன், வெங்கடேஷ் இருவரின் தந்தையும் இறந்துவிட்டனர் என்பது குறிப்படதக்கது.












Click it and Unblock the Notifications