கடன் வழங்குவதைக் குறைத்துக் கொண்ட பார்க்லேஸ்!
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு 400 கோடி ரூபாயாக இருந்த தனிநபர் கடன் வழங்கல், இந்த ஆண்டு வெறும் ரூ.100 கோடியாகக் குறைந்துவிட்டது.
சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கடன் வழங்கும் நடவடிக்கைகளில் எச்சரிக்கைப் போக்கைக் கடைப்பிடிக்கவிருப்பதாக பார்க்லேஸ் வங்கியின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநர் சமீர் பாட்டியா அறிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன கடன்கள் வழங்குவதை இந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மற்றொரு நிதி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி தனது இந்தியப் பிரிவை மூடிவிடும் முடிவுக்கு வந்துள்ளது. கடன் வழங்குவதை ஏற்கெனவே நிறுத்திவிட்ட இந்த நிறுவனம், தனது ஊழியர்களையும் படிப்படியாக நிறுத்திவருகிறது.












Click it and Unblock the Notifications