தங்கம் விலை ஒரே நாளில் ரூ.384 உயர்வு
சென்னை: மீண்டும் உச்சத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை. நேற்று ஒருநாள் மட்டும் பவுனுக்கு ரூ.384 அதிகரித்துள்ளது.
சமீப காலமாக தங்கத்தின் விலை அசாதாரண ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
1997-ம் ஆண்டு ஒருபவுன் தங்கம் ரூ.3 ஆயிரத்து 400 ஆக இருந்தது. ஆனால் வர்த்தகம் நுழைந்த பின்னர் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1250க்கும், ஒரு பவுன் 10 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் சற்று விலை குறைந்தது.
ஜூலை மாதம் 15ந் தேதி ரூ.10 ஆயிரத்தை தாண்டியது 1 சவரன் தங்கம்.
கடந்த 4 மாதங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்த போதும், மீண்டும் தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 14-ம் தேதி ரூ.8824க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம், நேற்று ரூ.9488 ஆக அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.1186க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.384 அதிகரித்துள்ளது.நாளை பங்குச் சந்தை மாறுதல்களைப் பொறுத்து மீண்டும் தங்க விலை உயரக் கூடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பொது மக்களோ, நகைக் போகலாமா வேண்டாமா என்ற அச்சத்துடன் நகைக் கடைகளைப் பார்த்த வண்ணம் செல்கின்றனர்!












Click it and Unblock the Notifications