அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை: அரசு
சென்னை: தமிழகத்தில் தங்கியுள்ள அனைத்து இலங்கை அகதிகளையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பும் திட்டம் எதுவம் இல்லை. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் தவறு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை அகதிகள், இந்தியாவில் தங்கியிருக்கும் காலம் முடிவடைந்து விட்டதால், அவர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதை தமிழக அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள ஏடு, ஒரு அரசியல் கட்சியின் மாநிலச் செயலாளருக்குச் சொந்தமானதாகும்.
அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது தவறான செய்தி. இந்த செய்தியால், தமிழகத்தில் உள்ள 115 முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளின் மனங்களில் தேவையில்லாத பயம் ஏற்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ள வசதிகளுடன் அமைதியான முறையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பபடப் போகிறார்கள் என்ற செய்தியை அரசு திட்டவட்டமாக மறுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications