இதயத்தில் ஓட்டை: சிகிச்சைக்குப் பணமில்லை - உதவிக்கு ஏங்கும் சிறுமி
திருச்சி: திருச்சியில் நாலரை வயது சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க போதிய பண வசதி இன்றி அவரது குடும்பம் தவித்து வருகிறது.
திருச்சி, கருமண்டபம், சக்தி நகரில் வசிப்பவர் லதா. இவர் மருந்து கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது நாலரை வயது மகள் திவ்யதர்ஷிணி.
இவருக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. சிறுமியைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்காக லதா தனது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உள்ளிட்டோரிடம் பணம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த சிறுமிக்கு உடனடியாக ASD CLOSURE SURGERY என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் அறிவுறுத்திதுள்ளனர்.
ஆனால் சிகிச்சைக்கு போதிய பண வசதி இன்றி லதா தவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications