For Daily Alerts
Just In
சபரிமலை: பம்பா நதியில் மூழ்கி 3 பக்தர்கள் சாவு
பத்தனம்திட்டா: சபரி மலை புண்ணிய நதியான பம்பாவில் குளித்தபோது, 3 பக்கதர்கள் ஆற்றோடு மூழ்கி இறந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் சென்று வருகிறார்கள். ரன்னி - பெருநாடு என்ற இடத்தில் ஓடும் பம்பா ஆற்றில் பக்தர்கள் குளித்தனர்.
இதில் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நிதீஷ் (வயது 26), அரவிந்த் (22), ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த ரெஞ்சித் (19) என்பது தெரிய வந்தது. 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
சபரிமலையில் தரிசனத்தை முடித்து விட்டு வந்த அவர்கள், ஆற்றில் குளித்த போது இறந்து விட்டதாக, அவர்களுடன் வந்த பக்தர்கள் கூறினார்கள்.
Comments
Story first published: Monday, November 24, 2008, 10:08 [IST]