அழைத்தார் பால் தாக்கரே-சந்தித்தார் ராஜ்
கட்சியில் தனது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு பால் தாக்கரே முக்கியத்துவம் தந்ததால் அவரது இன்னொரு கரமாக விளங்கிய தங்கை மகன் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு விலகினார்.
அதிலிருந்து இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், வட இந்தியர்களைத் தாக்குவதற்கு மட்டும் இரு கட்சியினரும் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் தாக்கினால் அவர்களும் சேர்ந்து கொண்டு தாக்குதலை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் பால் தாக்கரேவை ராஜ் தாக்கரே நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பால் தாக்கரே தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்ததால் தான் ராஜ் தாக்கரே அவரை சந்தித்ததாகவும் நவ நிர்மாண் அமைப்பி்ன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேயும் உடனிருந்தார்.