தீவிரவாதிகள் மீது ராணுவம்-என்எஸ்ஜி கூட்டாக தாக்குதல்

அங்கு 200 பேர் வரை சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை 60 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன.
அதே போல தாஜ் ஹோட்டலிலும் தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
நரிமன் ஹவுசிலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க இன்னொரு பிரிவு கமாண்டோக்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கி வருகின்றனர்.
மகாராஷ்டிர பகுதிக்கான ராணுவத்தின் ஜெனரல் ஆபிசர் கமாண்ட் அதிகாரியான ஹூடா தலைமையில் ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக ராணுவ ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஓரியண்ட் ஹோட்டலில் கீழே நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்புப் படை வாகனங்கள் மீது தீவிரவாதிகள் மாடியிலிருந்து கிரனைட் குண்டுகளை வீசினர்.
அவர்களிடம் ராக்கெட் லாஞ்சர்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கடற்படையும்...
அதே போல தீவிரவாதிகள் கடல் வழியாகவே மும்பைக்குள் நுழைந்ததாகத் தெரியவந்துள்ளதையடுத்து கடற்படை வீரர்களும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளை மும்பைக்குள் இறக்கிவிட்டுச் சென்ற படகைத் தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடு்த்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications