பெட்ரோல்: தியோராவுக்கு ஆணையம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்துப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி, நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று சமீபத்தில் முரளி தியோரா கூறியிருந்தார்.
இதற்கு பாஜக, இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது வாக்காளர்களைக் கவரும் வகையில் இவ்வாறு அறிவிப்பு வெளியிடுவதா என அவை கண்டித்திருந்தன. இதுதொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது.
இதையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications