தாக்குதலுக்கு உதவிய அண்டர்வோல்ர்ட் கும்பல்!
மும்பை: மும்பையில் நடந்த தாக்குதலுக்கு சில அண்டர்வோல்ர்ட் கும்பல்களும் உதவியிருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. குஜராத் வழியாக மும்பைக்கு படகில் வந்த இவர்களுக்கு மும்பையைச் சேர்ந்த அண்டர்வோர்ல்ட் கும்பல்களும் உதவியதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தும் வகையில் லஷ்கர்-ஏ-தொய்பா தனது 'மெரைன்' பிரிவையும் ஏற்படுத்தி பயிற்சி அளித்துள்ளதும் உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், தீவிரவாதிகளை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
மும்பை நரிமன் ஹவுஸ் ஹோட்டல் அமைந்துள்ள பகுதி யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்து, அங்கு இரு பொது மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications