முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்தார்

77 வயதாகும் வி.பி.சிங்குக்கு புற்று நோய் தாக்கியிருந்தது. இதனால் நீண்ட காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் அவர் காலமானார்.
டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
வி.பி. சிங்குக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
1931ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.
இந்திய அரசியலில் புதிய சகாப்தம் படைத்தவர், திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இந்தியாவின் 10வது பிரதமராக அவர் பதவி வகித்தார். ஒரு வருட காலம் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியைக் கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சிங்.
உ.பி. முதல்வராக, இந்திரா, ராஜீவ் காந்தி அமைச்சரவையில், நிதித்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சர் பதவியை வகித்தவர் வி.பி.சிங்.
ராஜீவ் காந்திக்கு எதிராக புரட்சி செய்து காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜனதாதளம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராஜீவுக்கு எதிராக மாபெரும் அலையை உருவாக்கி மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். பாஜக-இடதுசாரிகள் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.
பின்னர் ஜனதாதளம் பல துண்டுகளாக சிதறிப் போய் விட்டது.
சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர்.
சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும், ஓவியராகவும் திகழ்ந்தவர்.
புற்றுநோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் கடந்த சில ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மீது ஆழ்ந்த மரியாதை கொண்ட வி.பி.சிங் முதல்வர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர். டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் இவரை சந்திக்க கருணாநிதி தவறியதில்லை.
வி.பி.சிங் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தால் தனது இருக்கையை அவருக்குத் தந்துவிட்டு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து கொள்வார் கருணாநிதி. அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை தந்தவர் கருணாநிதி.
தமிழகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வி.பி.சிங், மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுவதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பரி்ந்துரைத்த மண்டல் கமிஷனின் அறிக்கையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டியவர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வி.பி.சிங் நிரந்தரமாக இடம் பிடித்தார்.
-
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியால் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்.. முதல்வர் யோகம் யாருக்கு -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா? -
"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா? -
UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம் -
"இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கூட தோத்துடும்" பாராட்டி தள்ளிய அமெரிக்க யூடியூபர்.. டிரெண்டிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல் -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 06/03/2026: மோடி டூ ஸ்டாலின் வரை பேசியவை என்ன? -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்?












Click it and Unblock the Notifications