புதுச்சேரியில் 1000 கிராமங்களில் வெள்ளம்
புதுவை: கனமழையில் கிட்டத்தட்ட புதுச்சேரி நகரமே மிதக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
நிஷா புயல் காரணமாக பெய்து வரும் இந்தபேய் மழைக்கு புதுவையில் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், எழில்நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வம்பா கீரப்பாளையம் உள்ளிட்ட மீனவ பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால், மக்கள் பீதியடைந்துள்ளனர். சூறாவளி காற்றில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் வைத்திலிங்கம்.
புதுவையின் முக்கிய சாலைகளில் ஒன்றான இந்திராகாந்தி சிக்னலில் 4 சந்திப்புகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கிராமங்களில் 500 ஏக்கர் பயிர்கள் மழைநீரில் நாசமானது.












Click it and Unblock the Notifications