சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனில் துப்பாக்கிச் சூடு-கான்ஸ்டபிளால் ஏற்பட்ட பீதி
Subscribe to Oneindia Tamil

நாரிமன் ஹவுஸ் மற்றும் ஓபராய் ஹோட்டலில் நுழைந்துள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியில் கமாண்டோ படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் வெறித்தனமான வேட்டையில் ஈடுபட்ட சத்ரபதி சிவாஜி ரயில்வே சந்திப்பு மற்றும் ஜிடி மருத்துவமனைக்கு வெளியே இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. ரயில் ஏற வந்த பயணிகள் சிதறி ஓடினர்.
ரயில்களும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் சுடவில்லை, கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததே இந்த பரபரப்புக்குக் காரணம் என பின்னர் தெரிய வந்தது.
இதை தலைமைச் செயலாளர் ஜானி ஜோசப்பும் உறுதி செய்தார். இதையடுத்து பரபரப்பு நீங்கியது. ரயில்களும் ஓடத் தொடங்கின.












Click it and Unblock the Notifications