தீவிரவாதியின் செல்போன் சிக்கியது-பாக்.கிலிருந்து தொடர்ந்து போன் கால்கள்
மும்பை: ஹோட்டர் தாஜ் மஹாலில் புகுந்த தீவிரவாதி ஒருவனின் செல்போன் சிக்கியுள்ளது. ஹோட்டலுக்கு வெளியே இன்று காலை அந்த போன் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
தீவிரவாதிகள்,ஹோட்டலின் உட்புறமிருந்து கையெறி குண்டுகளை வீசி எறிந்தபோது ஒரு தீவிரவாதியிடமிருந்து இந்த செல்போன் நழுவி விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த செல்போனைக் கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்த போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிலிருந்து பேசும் நபர்கள் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த போன் எங்கு பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து பேசும் நபர்கள் எந்த ஊரிலிருந்து பேசுகிறார்கள் என்பது குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
இந்த போன் விசாரணைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் போலீஸார் நம்புகின்றனர்.
தாக்கியது லஷ்கர்: ரஷ்யா:
இதற்கிடையே, மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும், அல் கொய்தா அமைப்பினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரஷ்ய ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு தகவல் தெரிவிக்கிறது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான நோவோஸ்தியிடம் ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கும், அல் கொய்தா அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கும்பல், பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல் கொய்தா முகாம்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.
இந்த குழுவை ஆரம்பத்தில் சாதாரணமாக இந்திய அரசு கருதியதே இப்படி ஒரு பெரும் சம்பவம் நடக்கக் காரணம்.
விசாரணை தொடர்பாக உதவி கேட்டு ரஷ்யாவின் ரகசிய போலீஸ் சேவையை இந்தியா இதுவரை கோரவில்லை என்றார் அவர்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications