ஊரில் கோஷ்டி மோதல்-பள்ளிக்கு விடுமுறை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இரு கோஷ்டியினருக்கு இடையே கிராமத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள மேலசெக்காரகுடி மற்றும் கீழசெக்காரகுடி ஆகிய பகுதிகளில் இரு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் வசிக்கின்றனர்.
கீழசெக்காரகுடியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு நேற்று இரவு மேலசெக்காரகுடியை சேர்ந்த கோழிகடை மணி, பலவேசம், கருணாநிதி மற்றும் வெள்ளையன் ஆகியோர் மது அருந்திவிட்டு தகராறு செய்தனர். இதை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த கீழசெக்காரகுடி கண்ணன் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கோழிக்கடை மணி கோஷ்டியினர் கண்ணனை சராமரியாக தாக்கினர்.
இதையடுத்து நேற்று காலை கீழசெக்காரகுடியை சேர்ந்த சிலர் கும்பலாக மேலசெக்காரகுடிக்கு சென்று அங்கிருந்த கருணாநிதியை தாக்கியதுடன் கோழிக்கடை மணிக்கு சொந்தமான வீட்டை தாக்கி ஓடுகளை அடித்த நொருக்கி்னர்.
இதனால் இரு தரப்பினர் மத்தியில் கடும் மோதல் உருவானது. இதில் கீழசெக்காரகுடியை சேர்ந்த ஆறுமுகம், கண்ணன் மற்றும் மேலசெக்காரகுடியை சேர்ந்த கருணாநிதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஊரில் பதட்டம் நிலவியதால், அங்குள்ள அரசு பள்ளிக்கு விடு்முறை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications