இறந்தவர்களின் உடல்களில் பாகிஸ்தான் தோட்டாக்கள்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் அனைத்தும் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜேஜே குருப் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், இதுவரை 100க்கும் மேற்பட்ட புல்லட்டுக்களை இறந்தவர்களின் உடல்களிலிருந்து அகற்றியுள்ளோம்.
அத்தனை குண்டுகளிலும் பிஓஎப் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பிஓஎப் என்பது பாகிஸ்தான் ஆர்டினன்ஸ் பேக்டரி என்று பொருள்.
அனைத்துக் குண்டுகளுமே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications