தீவிரவாதியின் பேச்சை ஒளிபரப்பிய டிவி நிறுவனத்துக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாரிமன் ஹவுஸைப் பிடித்து வைத்திருந்த தீவிரவாதியுடன் நடத்திய பேச்சை ஒளிபரப்பிய 'இந்தியா டிவி' நிறுவனத்திற்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டிசம்பர் 1ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நாரிமன் ஹவுஸை தீவிரவாதிகளிடமிருந்து மீட்க என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தபோது, இந்தியா டிவியில், நாரிமன் ஹவுஸில் இருந்த தீவிரவாதி ஒருவனின் பேட்டி ஒளிபரப்பானது.

இதுகுறித்து தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இது தீவிரவாதிகளின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்ல உதவும் செயலாகும்.

இதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுளளது. தீவரவாதத்தை ஊக்குவிக்கும் வகையி்ல் அமைந்துள்ளது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே என்.எஸ்.ஜி. படையினரின் பணிகளில் ஊறு விளைவிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்புகளையோ அல்லது வேறு மாதிரியான செய்திகளையோ டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பக் கூடாது என செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இருப்பினும் இந்தியா டிவி ஒளிபரப்பிய தீவிரவாதியின் பேச்சிலிருந்து அவனுடைய உச்சரிப்பு உள்ளிட்ட சில முக்கிய விவரங்களை பாதுகாப்புத்துறை நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+